11
இலங்கைசெய்திகள்

தமிழர் தலைநகரில் மூன்று தசாப்தங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதி

Share

தமிழர் தலைநகரில் மூன்று தசாப்தங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதி

திருகோணமலையில் (Trincomalee) 30 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் மூடப்பட்டிருந்த வீதியொன்று பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

உவர்மலை 22ம் படைப்பிரிவின் இராணுவப் படைத்தளத்தினை (Sri Lanka Army) அண்மித்த வீதியின் ஒரு பகுதியே இன்று (01) திறக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் அலுவலக வீதி வழியாக 22ம் படைப்பிரிவின் இராணுவ நூதனசாலையின் வாயிலில் இருந்து உவர்மலை மத்திய வீதியினை அடையக்கூடியதான வீதியானது கடந்த மூன்று தசாப்த காலமாக பொதுமக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படாத நிலையில் வீதித்தடைகள் போடப்பட்டிருந்தது.

உவர்மலை பகுதியின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள 22ம் படைப்பிரிவினை அடைவதற்கு மூன்று வீதிகள் காணப்படுகிறது.

இருப்பினும் அவ் வீதிகளூடான மக்கள் போக்குவரத்தானது சில பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் (Jaffna) 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதியொன்று அண்மையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியூடாக அச்சுவேலி நோக்கி செல்லுகின்ற சுமார் 2 கிலோமீற்றர்கள் தூரம் கொண்ட வீதியே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...