1 15
இலங்கைசெய்திகள்

நாங்கள் இதை செய்ய அதிகாரத்திற்கு வரவில்லை: பிரதமர் பகிரங்கம்

Share

நாங்கள் இதை செய்ய அதிகாரத்திற்கு வரவில்லை: பிரதமர் பகிரங்கம்

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவோ அல்லது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவுவதற்கோ நாங்கள் அதிகாரத்திற்கு வரவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

மாலம்பே – அரங்கல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வலுவான நாடாளுமன்றம் தேவை என தெரிவித்த பிரதமர், ஒரு பணக்கார நாடு அழகான வாழ்க்கையை உருவாக்க வேண்டுமானால், அதைச் செயல்படுத்தக்கூடிய நாடாளுமன்றம் தேவை என்றும் சுட்டிகாட்டியுள்ளார்.

மேலும், ஒரு சில திருடர்களை வைத்து பணக்கார நாட்டை உருவாக்க முடியுமா என கேள்வி எழுப்பிய பிரதமர், தற்போதைய இடைக்கால அரசாங்கத்தில் தாம் பெரும் பங்காற்றியுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, முடங்கிக் கிடந்த பல திட்டங்களைத் மீண்டும் தொடங்க முடிந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...