1 15
இலங்கைசெய்திகள்

நாங்கள் இதை செய்ய அதிகாரத்திற்கு வரவில்லை: பிரதமர் பகிரங்கம்

Share

நாங்கள் இதை செய்ய அதிகாரத்திற்கு வரவில்லை: பிரதமர் பகிரங்கம்

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவோ அல்லது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவுவதற்கோ நாங்கள் அதிகாரத்திற்கு வரவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

மாலம்பே – அரங்கல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வலுவான நாடாளுமன்றம் தேவை என தெரிவித்த பிரதமர், ஒரு பணக்கார நாடு அழகான வாழ்க்கையை உருவாக்க வேண்டுமானால், அதைச் செயல்படுத்தக்கூடிய நாடாளுமன்றம் தேவை என்றும் சுட்டிகாட்டியுள்ளார்.

மேலும், ஒரு சில திருடர்களை வைத்து பணக்கார நாட்டை உருவாக்க முடியுமா என கேள்வி எழுப்பிய பிரதமர், தற்போதைய இடைக்கால அரசாங்கத்தில் தாம் பெரும் பங்காற்றியுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, முடங்கிக் கிடந்த பல திட்டங்களைத் மீண்டும் தொடங்க முடிந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...