13 2
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை

Share

நாட்டு மக்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை

அனுபவம் வாய்ந்தவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யாவிடின் துன்ஹிந்த – பதுளை வீதியில் கவிழ்ந்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பேருந்தைப் போன்று நாடு விபத்துக்குள்ளாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற மாநாட்டின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பல தடவைகளாக இந்த அனுபவம் என்ற விடயத்தை ரணில் விக்ரமசிங்க, கோடிட்டு பிரசாரங்களில் பேசியுள்ளார்.

அந்த வகையிலேயே இன்றும் ரணிலின் கருத்து வெளியாகியுள்ளது.

தேசிய மக்கள் சக்தியில் (NPP) உள்ளவர்கள் புதிதாக களத்துக்கு வந்தவர்கள் என்றும் நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கு அனுபவம் தேவை என்பதே ரணிலின் கருத்தாக அமைந்துள்ளது.

எனினும், நாட்டை நிர்வகிப்பதற்கு தேவையான அணி தம்மிடம் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...