1 2
இலங்கைசெய்திகள்

முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம்: விலைகளில் பெரும் மோசடி

Share

முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம்: விலைகளில் பெரும் மோசடி

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இம்மாதம் நடுப்பகுதியில் மீண்டும் முட்டை விலையை உயர்த்த கோழிப்பண்ணை உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நாட்களில் சில்லரை விலையில் ஒரு முட்டை 35 ரூபாய் முதல் 37 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

இருப்பினும், கோழிப்பண்ணைகளில் 28 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலான விலையில் வாங்கப்படும் முட்டை, சில்லறை வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்களால் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு முட்டையின் உற்பத்திச் செலவு 34 ரூபாயாக உயர்ந்துள்ளதால், முட்டை விற்பனையில் உற்பத்திச் செலவைக் கூட ஈடுகட்ட முடியாமல் பண்ணை உரிமையாளர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கோழித் தீவனமாக வழங்கப்படும் ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 80 ரூபாவாக இருந்ததாகவும், தற்போது அரிசி ஆலைகளில் அரிசி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஒரு கிலோ வெள்ளை அரிசி 140 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மேலும்,140 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சோளத்தின் விலையும் 170 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோழி தீவனத்தின் விலை உயர்வு மற்றும் முட்டை விலை குறைப்பினால் தங்களின் வருமானம் சரிந்துள்ளதாக சிறு மற்றும் நடுத்தர கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பின்னணியில் பெரிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...