18 1
இலங்கைசெய்திகள்

கருணா – பிள்ளையானுக்கு அநுர தரப்பு பகிரங்க சவால்!

Share

கருணா – பிள்ளையானுக்கு அநுர தரப்பு பகிரங்க சவால்!

வரலாற்றில் முக்கியமான மாற்றத்திற்கு கிழக்கு மாகாணம் தயாராகி வருவதாகவும், கருணா – பிள்ளையான் யார் வந்தாலும் இதனை தடுக்க முடியாது எனவும், தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி(Sunil Handunnetti ) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

மட்டக்களப்பில் பழைய அரசியல்வாதிகள் பழைய கதைகளை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

அநுரகுமாரவை தெரியும் என இங்குள்ள அரசியல் தலைமைகள் கூறினாலும், அரசாங்கத்தில் அவர்களுக்கு இடமில்லை. குறிப்பாக மட்டக்களப்பில் பிள்ளையானின் அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது.

மேலும், அரசு சலுகைகளை பாவித்தே ரணில் விக்ரமசிங்க பிரசாரம் செய்து கொண்டார்.

அவ்வாறே சஜித் பிரேமதாசவும், பிரசார செயலை முன்னெடுத்திருந்தார்.

அவர்கள் ஆட்சி அமைக்க முடியாத காரணத்தால் மக்கள் மத்தியில் எங்களைப் பற்றி ஒரு பயத்தை உருவாக்கியிருந்தனர்.

ஜோன்சன் பெர்னான்டோ, லொஹான் ரத்வத்த போன்றோருக்கு, அதிகாரத்தின் மூலம் இனிமேல் களவாட முடியாது.

அவர்கள் நீதிக்கு முன்னால் வரக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இது ஆரம்பம் மாத்திரம்தான்.

அரச காரியாலயங்களில் ஜனாதிபதியின் உருவப்படம் பொறித்த புகைப்படங்கள் அமைந்திருக்கும்.

தற்போது எவருடைய படமும் இல்லை, கிரம உத்தியோகஸ்த்தர் காரியாலயம் தொடக்கம் உயர் நீதிமன்றம் வரை ஜனாதிபதிகளின் படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.

இப்போது அவ்வாறு படங்கள் இல்லை என்பதற்கான காரணங்கள் என்ன? அரச ஊழியர்களுக்கு அரசாங்க தலையீடு இனி இல்லை என்பதை அறிவிப்பதே.

நீண்ட காலத்துக்கு பின்னர் நிதானமான ஒரு நம்பிக்கையான சூழல் உருவாகி இருக்கின்றது’’ என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...