20 21
இலங்கைசெய்திகள்

நாட்டின் அரசியல் முறை குறித்து குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நாமல் ராஜபக்ச

Share

நாட்டின் அரசியல் முறை குறித்து குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நாமல் ராஜபக்ச

நாட்டின் அரசியல் முறை, மாற்றப்பட வேண்டும் என்று அடிக்கடி கூறப்பட்டாலும், அது தற்போதுள்ள அரசாங்கத்தின் வழிக்கேற்ப மாற்றியமைக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், அரசியல் வேட்டை நடத்தப்பட்டால், நீதிமன்றத்தில் முன்னிலையாகி, நீதிமன்றத்தின் உதவியை நாடுவதன் மூலம் சட்டத்தை பின்பற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடும் திறன் நாட்டில் யாருக்கும் இல்லை. எனவே எந்த விசாரணைக்கும் தாம் தயாராக உள்ளதாக நாமல் கூறியுள்ளார்.

ஜனாதிபதி பதவியை தக்கவைக்க ஏற்கனவே ஐந்து வருடங்கள் வழங்கப்பட்டுள்ளன. காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது அரசில் அங்கம் வகிப்பதால் அரசாங்கத்தை கவிழ்க்க எவரும் இல்லை.

அத்துடன் இனி ஒரு போராட்டத்தை வழிநடத்த யாரும் இல்லை என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...