18 20
இலங்கைசெய்திகள்

ரணிலின் குற்றச்சாட்டுக்கு பதிலடி வழங்கியுள்ள ஜனாதிபதி அநுர

Share

ரணிலின் குற்றச்சாட்டுக்கு பதிலடி வழங்கியுள்ள ஜனாதிபதி அநுர

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கூற்றுக்களை மறுத்துள்ள, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்குத் தேவையான நிதியை ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் ஒதுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

 

புத்தளத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார, பல்வேறு செலவினங்களுக்கான மேலதிக நிதி, வரவு செலவுத் திட்டம் அல்லது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் கணக்கு வாக்கெடுப்பு மூலம் நிதி ஒதுக்கப்படுவது வழமையாகும்.

 

எனினும் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான தீர்மானம், ரணில் விக்ரமசிங்கவினால் அவசரமாக எடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

 

பொதுத் துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை தீர்மானம், செப்டெம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அஞ்சல் மூல வாக்களிப்புக்கு முன்னதாக செப்டம்பர் 3 ஆம் திகதி எடுக்கப்பட்டது.

 

எனினும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

 

எவ்வாறாயினும், அரச துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிதியை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...