2 35
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவை பின்தொடரும் அநுர : கடுமையாக சாடும் இராதாகிருஷ்ணன்

Share

கோட்டாபயவை பின்தொடரும் அநுர : கடுமையாக சாடும் இராதாகிருஷ்ணன்

2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), இனவாதத்தைப்பற்றி பேசி மக்கள் மத்தியில் எவ்வாறு வாக்கு சேகரித்தாரோ அதுபோல தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் (Anura Kumara Dissanayake) மக்கள் மத்தியில் இனவாதத்தை பற்றி பேசியே வாக்கு சேகரிக்கின்றார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் (V.Radhakrishnan) தெரிவித்துள்ளார்.

 

குறித்த விடயத்தை நானு ஒயா பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இரண்டு தேர்தலிலும் முக்கிய பங்கை வகித்தது இந்த ஈஸ்டர் தாக்குதல். அந்த ஈஸ்டர் தாக்குதல் பிரச்சினையை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

 

தற்போது நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள் அனைவரும் ஈஸ்டர் தாக்குதலோடு தொடர்புடையவர்கள் என கம்மன்பில அறிவித்திருந்தார். தற்போது இது ஒரு புதுக் கதையாக இருக்கிறது இரண்டு தேர்தலிலும் இந்த இரண்டு ஜனாதிபதிகளும் இதனை பயன்படுத்தியே வந்துள்ளனர்.

 

நாம் தற்போதய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முழுபலத்தையும் வழங்கினால் அவர் நினைத்ததை வைத்து செயல்படுவார். ஆகவே ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இந்த நாட்டின் பிரதமராக வருவதற்கு செயற்பட வேண்டும்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...