2 35
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவை பின்தொடரும் அநுர : கடுமையாக சாடும் இராதாகிருஷ்ணன்

Share

கோட்டாபயவை பின்தொடரும் அநுர : கடுமையாக சாடும் இராதாகிருஷ்ணன்

2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), இனவாதத்தைப்பற்றி பேசி மக்கள் மத்தியில் எவ்வாறு வாக்கு சேகரித்தாரோ அதுபோல தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் (Anura Kumara Dissanayake) மக்கள் மத்தியில் இனவாதத்தை பற்றி பேசியே வாக்கு சேகரிக்கின்றார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் (V.Radhakrishnan) தெரிவித்துள்ளார்.

 

குறித்த விடயத்தை நானு ஒயா பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இரண்டு தேர்தலிலும் முக்கிய பங்கை வகித்தது இந்த ஈஸ்டர் தாக்குதல். அந்த ஈஸ்டர் தாக்குதல் பிரச்சினையை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

 

தற்போது நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள் அனைவரும் ஈஸ்டர் தாக்குதலோடு தொடர்புடையவர்கள் என கம்மன்பில அறிவித்திருந்தார். தற்போது இது ஒரு புதுக் கதையாக இருக்கிறது இரண்டு தேர்தலிலும் இந்த இரண்டு ஜனாதிபதிகளும் இதனை பயன்படுத்தியே வந்துள்ளனர்.

 

நாம் தற்போதய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முழுபலத்தையும் வழங்கினால் அவர் நினைத்ததை வைத்து செயல்படுவார். ஆகவே ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இந்த நாட்டின் பிரதமராக வருவதற்கு செயற்பட வேண்டும்.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பகுதி சந்திர கிரகணத்தைக் காணும் அரிய வாய்ப்பு!

இலங்கையர்கள் மார்ச் 3, 2026 செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணத்தைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஆர்தர்...

09 3
செய்திகள்உலகம்

வட்ஸ்அப் வெப் சேவையில் திடீர் முடக்கம்: ஐபோன் பயனர்கள் கடும் அவதி!

உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் வெப் (WhatsApp Web) சேவையைப் பயன்படுத்துவதில் இன்று திடீர்...

08 3
செய்திகள்இலங்கை

குற்றவாளிகளைத் தேடி: சிவப்பு அறிவித்தல் இன்றி 14 பேர் நாட கடத்தல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

சர்வதேச பொலிஸ் (Interpol) சிவப்பு அறிவித்தல்கள் (Red Notice) இன்றி, இதுவரை 14 சந்தேக நபர்களை...

06 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஒரே நாளில் 549 பேர் கைது: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் போக்குவரத்து விதிமீறல்களும் அடக்கம்!

இலங்கை பொலிஸாரினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது,...