3 30
இலங்கைசெய்திகள்

அநுரவின் ஆட்சிக்கு ஆபத்தாகும் மூன்று நாடுகள்

Share

அநுரவின் ஆட்சிக்கு ஆபத்தாகும் மூன்று நாடுகள்

மனித உரிமை மீறல்கள் விடயத்தில் இலங்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படுமாயின் அது பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களின் வழக்குகளில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என பிரித்தானிய மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் காரணமாக பல பேரின் வழக்குகளில் ஆழமான விசாரணைகளை முன்னெடுக்காது, ஆதாரங்களை சரியாக பரிசீலிக்காமையினால் புகலிடக்கோரிக்கையாளர்கள் மத்தியில் போலியான எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது மிக இலகுவாக பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமையை பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

பிரித்தானியாவினை பொறுத்தமட்டில் ஏனைய நாட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், இலங்கை விடயத்தில் இதுவரை அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எதிர்காலத்தில் இலங்கையர்கள் பலர் நாடு கடத்தப்படும் பட்சத்தில் அநுரவின் ஆட்சிக்கு அவை ஆபத்தாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...