12 19
இலங்கைசெய்திகள்

பழைய வேட்பு மனுவின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்

Share

பழைய வேட்பு மனுவின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்

பழைய வேட்பு மனுவின் பிரகாரமே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள், வேட்பு மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் நிதிநிலைமையைக் கருத்திற் கொண்டு பிற்போடப்பட்டிருந்தன.

இந்நிலையில் பொதுத் தேர்தலை அடுத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களையும் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருகின்றது.

முன்னைய வேட்புமனுக்கள் ரத்துச் செய்வது தொடர்பில் நாடாளுமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ இதுவரை எந்தவொாு தௌிவான முடிவும் எடுக்கப்படாத நிலையில், பழைய வேட்பு மனுக்களின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளது.

எனினும் குறித்த வேட்பு மனுவில் உள்ள வேட்பாளரொருவர் மரணித்திருக்கும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக மாத்திரம் வேறு பதிலீடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
palansena
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் தொடரும் போராட்டம் – அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம்...

parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...