1 25
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு: ஜனாதிபதி அநுரவிற்கு அழுத்தம்

Share

எரிபொருள் விலை குறைப்பு: ஜனாதிபதி அநுரவிற்கு அழுத்தம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தலுக்கு முன்னர் கூறியது போன்று எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 82.50 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும் என தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் நேற்றையதினம் (17) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலை குறைப்புக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி தேவையில்லை எனவும் ஜனாதிபதி, எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் நிதியமைச்சுக்கு அதற்கான அதிகாரம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தற்போதுள்ள இந்த அநியாய விலைச்சூத்திரத்தை எதிர்வரும் நாடாளுமன்றத்தில் இரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் லாபமீட்டும் வகையில் எரிபொருள் லீட்டர் ஒன்றுக்கு மேலதிகமாக 50 ரூபா வரி அறவீடு செய்வதாக ஆனந்த பாலித குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதன் படி, 50 ரூபா வரி நீக்கத்துடன் எரிபொருள் ஒரு லீட்டரின் விலையை 82 ரூபாவினால் குறைக்க முடியும் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...