17 13
இலங்கைசெய்திகள்

இலங்கை கொள்வனவு செய்யவுள்ள கடன் முகாமைத்துவ மென்பொருள் அமைப்பு

Share

இலங்கை கொள்வனவு செய்யவுள்ள கடன் முகாமைத்துவ மென்பொருள் அமைப்பு

பொதுக் கடனை நிர்வகிப்பதற்கான கடன் முகாமைத்துவ மென்பொருள் அமைப்பை (debt management software system) கொள்வனவு செய்ய உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுக் கடன் முகாமைத்துவச் சட்டத்தின்படி, ஒரு பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் நிறுவப்பட வேண்டும்.

அத்துடன் இந்த சட்டத்தின் 23வது பிரிவின்படி, பொதுக் கடன் குறித்த சரியான, விரிவான மற்றும் துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்கள் பொருத்தமான தரவு அமைப்பில் பராமரிக்கப்பட வேண்டும்.

பொதுநலவாய செயலகத்தால் வழங்கப்பட்ட பொதுநலவாய செயலக கடன் பதிவு மற்றும் மேலாண்மை அமைப்பையே தற்போது, இலங்கை அரசாங்கம் வெளிநாட்டுக் கடன் பதிவு மற்றும் கடன் மேலாண்மைக்கு பயன்படுத்துகிறது.

இது வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தால் நிறுவப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

இந்த அமைப்பின் வருடாந்த உரிமத்தின் புதுப்பித்தல் மற்றும் நீடிப்பு தற்போது பொதுநலவாய செயலகத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் உலக வங்கியின் தொழில்நுட்ப பிரதிநிதிகள் குழுவை நிறுவுவது தொடர்பாக சர்வதேச கண்காணிப்பு நிதியத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்படி, பொதுநலவாய செயலகத்திடம் இருந்து பொதுநலவாய மெரிடியன் மென்பொருளை கொள்வனவு செய்வதற்கான பிரேரணைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...