இலங்கைசெய்திகள்

அநுரகுமாரவுக்குத் தூதுவிட்ட சரத் பொன்சேகா! தனித்து அரசியல் செய்ய தீர்மானம்

Share
7 15
Share

அநுரகுமாரவுக்குத் தூதுவிட்ட சரத் பொன்சேகா! தனித்து அரசியல் செய்ய தீர்மானம்

முன்னாள் அமைச்சர், பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தொலைபேசி வழியாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சரத் பொன்சேகா, அக்கட்சியை விட்டும் விலகி, தனித்து ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.

அதன் காரணமாக அவருக்கு இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தியில் இடமளிக்கப்படவில்லை. அத்துடன் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியிலும் சரத் பொன்சேகாவை இணைத்துக் கொள்ள எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.

இதனையடுத்து சரத் பொன்சேகா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு, அரசியல் செயற்பாடுகளை ஒன்றிணைந்து முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

எனினும் கடந்த ஜனாதிபதித் ​தேர்தலின் போது தங்களுக்கு ஆதரவளிக்காத எவரையும் பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவோ, தங்களுடன் இணைத்துக் கொள்ளவோ தயாரில்லை என்று அநுர தரப்பு மிக கடுமையான முறையில் சரத் பொன்சேகாவுக்குப் பதிலளித்துள்ளது.

அதனையடுத்து சரத் பொன்சேகாவும் இம்முறை பொதுத் தேர்தலில் ஒதுங்கியிருக்கத் தலைப்பட்டுள்ளார்.

அத்துடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய பதவியொன்றைப் பெற்றுக் கொள்ளல் அல்லது எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான முயற்சிகளில் மீண்டும் ஈடுபட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...