27 2
இலங்கைசெய்திகள்

இரண்டு மாதங்களுக்குள் 9ஆயிரம் இணையக்குற்ற முறைப்பாடுகள்

Share

இரண்டு மாதங்களுக்குள் 9ஆயிரம் இணையக்குற்ற முறைப்பாடுகள்

இந்த வருடம் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடையில் இணைய குற்றச் செயல்கள் தொடர்பில், 9,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் பொறியியலாளர் சாருக தமுனுபொல இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி இணையக் குற்றச் செயல்களில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கவலையளிக்கும் வகையில், இந்த முறைப்பாடுகளில் 80 வீத சமூக ஊடக தளங்களை உள்ளடக்கிய குற்றங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் சிறுவர்களை மிரட்டிய 85 முறைப்பாடுகளும், சிறுவர் துஸ்பிரயோகத்துடன் தொடர்புடைய 40 முறைப்பாடுகளும் உள்ளடங்கியுள்ளன.

இதனால் இணையப் பயனர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்தநிலையில் இணைய அச்சுறுத்தல்கள் தொடர்வதால், தனிஆட்களும் நிறுவனங்களும் விழிப்புடன் இருப்பதும், சாத்தியமான இணையத் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள செயலூக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் முக்கியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...