25 1
இலங்கைசெய்திகள்

ரணில் மற்றும் சஜித் பிரேமதாச இணைவதினை குழப்பும் முக்கிய தலைவர்

Share

ரணில் மற்றும் சஜித் பிரேமதாச இணைவதினை குழப்பும் முக்கிய தலைவர்

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியும், சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவதினை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் குழப்புவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரு தரப்பிற்கும் இடையில் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொண்டதன் பின்னர் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தலைமையிலான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

இரு கட்சிகளும் கூட்டணியாக தேர்தலில் போட்டியிட முடியும் என தாம் கருதியதாக தெரிவித்துள்ளார்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொண்டதன் பின்னர் முரண்பாட்டு நிலை ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைமைப் பொறுப்பினை ருவான் விஜேவர்தனவிற்கும் சிரேஸ்ட தலைவராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கும் தமது தரப்பில் யோசனை முன்வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த யோசனைக்கு கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்க இணங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...