11 2
இலங்கைசெய்திகள்

தெற்கு அதிவேக வீதியிலிருந்து போதைப்பொருள் விநியோகம்! வெளியான பல அதிர்ச்சி தகவல்

Share

தெற்கு அதிவேக வீதியிலிருந்து போதைப்பொருள் விநியோகம்! வெளியான பல அதிர்ச்சி தகவல்

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் வெலிப்பன்ன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர், இந்த ஐஸ் போதைப்பொருளை அளுத்கம, வெலிப்பன்ன, மத்துகம, லெவ்வந்துவ பிரதேசங்களுக்கும், வெலிப்பன்ன தெற்கு அதிவேக வீதியிலிருந்து பல்வேறு தரப்பினருக்கு விநியோகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாண புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​தற்போது வெளிநாட்டில் மறைந்திருக்கும் அஹுங்கல்ல சஞ்சீவவிடம் இருந்து இந்த ஐஸ் போதைப்பொருளை பெறுவதாக தெரிவித்துள்ளார்.

விசேட பொலிஸ் குழுவொன்று வெலிபன்ன-வலகெதர பன்சல வீதி பகுதியில் உள்ள வீட்டின் அறை ஒன்றில் ஐஸ் போதைப்பொருளை பொதி செய்துக்கொண்டிருந்த போது,நேற்று (02) மாலை சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

கைதான சந்தேகநபரிடம் இருந்து கிட்டத்தட்ட 1 கோடியே 44 இலட்சம் ரூபா பெறுமதியான 900 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் வெலிபன்ன வலகெதர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவராவார்.

மேலும் சந்தேகநபர் இன்று (03) மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.

Share
தொடர்புடையது
15 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – அவுஸ்திரேலியா உறவுகளை வலுப்படுத்த இணக்கம்: ஜனாதிபதியுடன் உயர்ஸ்தானிகர் சந்திப்பு!

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் (Paul Stephens) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

14 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பணவீக்கம் 1.6% ஆக வீழ்ச்சி: தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் தகவல்!

இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில், 2026 பெப்ரவரி மாதத்திற்கான பணவீக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,...

13 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்குளிய பல்பொருள் அங்காடியில் மதுபானம் திருடிய ‘மோதர சுதா’ கைது: ஹெரோயினும் பறிமுதல்!

கொழும்பு, மட்டக்குளிய பகுதியில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி (Supermarket) ஒன்றினுள் புகுந்து, அங்கிருந்த விலையுயர்ந்த...

12 20
செய்திகள்உலகம்

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன்: எத்தகைய உதவியையும் வழங்கத் தயார் – ஈரான் தூதுவர்!

மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் அதிகரித்துள்ள சூழலில், இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும்,...