3
இலங்கை

ஜனாதிபதி அநுரகுமாரவின் ஆட்சி – இலங்கை குறித்து வெளியான அறிக்கை

Share

ஜனாதிபதி அநுரகுமாரவின் ஆட்சி – இலங்கை குறித்து வெளியான அறிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பதவிக்கு வந்தால் நாட்டில் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி அடையும் என்றும் டொலரின் பெறுமதி மற்றும் பங்குச் சந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்படலாம் என கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்திருந்தது.

எனினும் நேற்றைய தினம் டொலருக்கெதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய மாற்றம் இன்றி காணப்படுவதுடன் பங்குச்சந்தையும் சீரான நிலையில் காணப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (25.09.2024) நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 307.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளின் போக்கை கணிசமான அளவில் மாற்றாது என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் உருவாகியுள்ள புதிய சூழல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு சர்வதேச முதலீடு மற்றும் கடன் தர நிர்ணய சேவையான மூடிஸ் தெரிவித்துள்ளது.

ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பெரிய பொருளாதாரக் கொள்கைகள் பெரிதாக மாறாது என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சில கொள்கை முன்னுரிமைகளை மீட்டமைக்கும் போது நிதி ஸ்திரத்தன்மையை பராமரிப்பது சவாலானதாக இருக்கலாம் என்று நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. இது மேலும் அதிக கடன் அபாய வகைப்பாடுகளுக்கு வழிவகுக்கும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொருளாதார மாற்ற சட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்த இலக்குகளை புதிய சட்டம் அல்லது திருத்தம் மூலம் மாற்ற முடியாது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆட்சேபனை இல்லை எனவும் மூடிஸ் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...