இலங்கைசெய்திகள்

தபால்மூல வாக்களிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

Share
17 21
Share

தபால்மூல வாக்களிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

அது தொடர்பான அறிவித்தலை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவு தொடக்கம் விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் இன்று தொடக்கம் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...