14 23
இலங்கைசெய்திகள்

புதிய ஜனாதிபதி அநுரவிடம் மத குருமார்கள் விடுத்துள்ள கோரிக்கை

Share

புதிய ஜனாதிபதி அநுரவிடம் மத குருமார்கள் விடுத்துள்ள கோரிக்கை

புதிய ஜனாதிபதியின் வருகையினால் இந்த நாட்டு மக்கள் சுபிட்சமான ஒரு வாழ்க்கையை கொண்டு நடத்த வேண்டும் என மத குருமார்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவிற்கு ஆதரவாக இடம்பெற்ற மகிழ்ச்சி கொண்டாட்டங்களின் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய ஜனாதிபதியின் வருகையினால் இந்த நாட்டு மக்கள் சுபிட்சமான ஒரு வாழ்க்கையை கொண்டு நடத்த வேண்டும். ஒற்றுமையை பற்றி பிடியுங்கள். ஒற்றுமையின் மூலம் அன்பாக, பண்பாக பாசத்தின் மூலம் பரஸ்பரமாக இருக்க வேண்டும்.

இலங்கை திருநாட்டில் நாம் ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுத்து இருக்கின்றோம். புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்ற அவர் இந்த நாட்டில் இருக்கின்ற எல்லா மக்களுக்கும் சமத்துவமான சேவையினை வழங்க வேண்டும்.

புதிய ஜனாதிபதியின் வருகை நாளே இந்த நாட்டில் இருக்கின்ற எல்லா மக்களும் எல்லாவிதமான சிறப்புகளையும் பெற வேண்டும்.

இவர்கள் செய்கின்ற ஒவ்வொரு சேவையிலும் இறைவனின் திருவருளோடு சிறப்பாக நடைபெற வேண்டும்” என தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...