25 17
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் 2024: கட்டுப்பணத்தை இழந்த 35 வேட்பாளர்கள்

Share

ஜனாதிபதி தேர்தல் 2024: கட்டுப்பணத்தை இழந்த 35 வேட்பாளர்கள்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களைத் தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் தங்களது கட்டுப்பணத்தை இழந்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாகத் தெரிவான அநுரகுமார திஸாநாயக்க, இரண்டாம் இடத்தை பெற்ற சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு மாத்திரமே கட்டுப்பணத்தை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை தேர்தலில் வரலாற்றில் அதிகளவான வேட்பாளர்கள் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.

இதற்கமைய 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்திய நிலையில், அவர்களில் 39 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். ஜனாதிபதி வேட்பாளரான அஹிதுருஸ் மொஹமட் இல்யாஸின் திடீர் மரணம் காரணமாக இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் 38பேர் மாத்திரமே போட்டியிட்டனர்.

இதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஊடாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு 50,000 ரூபாவும், சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு 75,000 ரூபாவும் கட்டுப்பணமாக அறவிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தேர்தலில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஸ, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயதாஸ ராஜபக்ஸ, திலித் சுசந்த ஜயவீர, சரத் மனமேந்திர, பிரியந்த புஸ்பகுமார விக்ரமசிங்க, கே.கே.பியதாஸ, சிறிபால அமரசிங்க, சரத் கீர்த்திரத்ன, லலித் டி சில்வா ஆகியோர் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர்.

அத்துடன், தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், மயில்வாகனம் திலகராஜ், அபுபக்கர் மொஹமட் இன்பாஸ், ஏ.எஸ்.பி.லியனகே, பானி விஜேசிறிவர்தன, அஜந்த டி சொய்சா, பத்தரமுல்லே சீலரத்ன தேரர், நுவன் சஞ்சீவ போபகே, கே.ஆனந்த குலரத்ன ஆகியோரும் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், ஓஷல லக்மால் அனில் ஹேரத், ஜனக்க பிரியந்த குமார ரத்நாயக்க, அக்மீமன தயாரத்ன தேரர், கே.ஆர்.கிஷான், பொல்கம்பொல ராலலாகே சமிந்த அநுருத்த, அநுர சிட்னி ஜயரத்ன, சிறிதுங்க ஜயசூரிய ஆகியோரும் கட்டுப்பணத்தை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மகிந்த தேவகே, மொஹமட் இல்லியாஸ், லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஸ, அன்டனி விக்டர் பெரேரா, கீர்த்தி விக்ரமரத்ன, மரக்கலமானகே பிரேமசிறி, பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க, டி.எம்.பண்டாரநாயக்க, அகம்பொடி பிரசங்க சுரஞ்ஜீவ அனோஜ் டி சில்வா, அநுருத்த ரணசிங்க ஆராய்ச்சிகே ரொஷான் ஆகியோரும் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணத்தை இழந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...