24 66ed4ce5dfc9c
இலங்கைசெய்திகள்

பசில் – நாமலின் பிள்ளைகள் நாட்டிலிருந்து வெளியேறிய செய்தி! மொட்டு கட்சி வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு

Share

 பசில் – நாமலின் பிள்ளைகள் நாட்டிலிருந்து வெளியேறிய செய்தி! மொட்டு கட்சி வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு

பசில் ராஜபக்ச நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் அவர், கட்சியின் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளுக்காக விரைவில் நாடு திரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச இன்று அதிகாலை இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் சில வாரங்களுக்கு முன்னர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருந்தார்.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் காரணமாக பசிலுக்கான வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

தான் நாட்டை விட்டு வெளியேறப் போவது தொடர்பில் பசில் ராஜபக்ச ஏற்கனவே கட்சிக்கு அறிவித்திருந்தார். எனினும் அவர் தனது மருத்துவப் பரிசோதனையை தொடர்ந்து, கட்சியின் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விரைவில் நாடு திரும்புவார் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் இரண்டு பிள்ளைகளும் அவரது மனைவியின் குடும்பத்துடன் இன்று இலங்கையை விட்டு வெளியேறியதாகக் கூறப்படும் கூற்றுக்கள் உண்மைக்குப் புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாமல் ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் கதிர்காமம் விகாரைக்கு சமய அனுஷ்டானங்களுக்காகச் சென்றுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...