8 26
இலங்கைசெய்திகள்

இறுதி நேர சிறப்பு நேர்காணலில் ரணில் பகிரங்க எச்சரிக்கை

Share

இறுதி நேர சிறப்பு நேர்காணலில் ரணில் பகிரங்க எச்சரிக்கை

மாலைதீவு பொருளாதார ரீதியாக சற்று மோசமான நிலைமையில் இருப்பதால் அங்கு வேலை செய்யும் இலங்கையர்களில் குறைந்தது 10 ஆயிரம் பேராவது மீண்டும் இலங்கைக்கு வரவேண்டியிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் (18.09.2024) ஊடகவியலாளர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

“மாலைதீவு சற்று மோசமான நிலைமையில் தான் உள்ளது. எனினும், இவ்வாரத்திற்குள் நிதியை பெற்றுக்கொள்ள அந்நாடு முயற்சிக்கின்றது. அந்நாட்டின் நிதியமைச்சர் இங்கும் வந்து எமது உதவியைக் கோரியுள்ளார்.

அங்கு ஏதும் பிரச்சினை ஏற்பட்டால், அங்கு வேலை செய்யும் 30 – 40 ஆயிரம் இலங்கையர்களுக்கு பாதிப்பாக அமையும். குறைந்தது 10 ஆயிரம் பேராவது மீண்டும் இலங்கைக்கு வரவேண்டியிருக்கும்.

எமது நாட்டிலிருந்துதான் உணவு உள்ளிட்ட பல விடயங்கள் அங்கு அனுப்பப்படுகின்றன. அது இல்லாது போகும். அத்தோடு, மாலைதீவுக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் இங்கே வருவதை தவிர்க்கிறார்கள்.

அவர்கள் இங்கே வந்துவிட்டு மாலைத்தீவுக்கு செல்வதில்லை. எனவே, இதுவும் பாதிக்கப்படலாம். எனவே, மாலைதீவு பிரச்சினை எம்முடன் நேரடித் தொடர்பாக இருப்பதால், இதனை நிவர்த்தி செய்வது எப்படி என்றுதான் நடவடிக்கை எடுக்கிறோம்.

இல்லாவிட்டால், மாலைதீவில் பிரச்சினை ஏற்பட்டால் அது இலங்கையையும் தான் பாதிப்படையச் செய்யும்” என்றுள்ளார்.

Share
தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...