12 9
இலங்கைசெய்திகள்

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி: முன்னாள் இராணுவ மேஜர் வாக்குமூலம்

Share

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி: முன்னாள் இராணுவ மேஜர் வாக்குமூலம்

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில், ஏனைய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக்கூறி, குற்றப்புலனாய்வு திணைக்களம் இலங்கை இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஒருவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது குறித்த மேஜர், இந்த கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடந்த செப்டம்பர் 7ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த காணொளியை உறுதிப்படுத்தி காணொளி நாடாவை அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், காட்சிகளுடன் போலி குரல் சேர்க்கப்பட்டுள்ள காணொளி ஒன்று குறித்து, தேசிய மக்கள் சக்தி தகவலை வெளியிட்டுள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...