17 5
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடக்கும் மோசடி – வசமாக சிக்கிய நபர்

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடக்கும் மோசடி – வசமாக சிக்கிய நபர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வாகன தரிப்பிடத்தில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 118 வெளிநாட்டு மதுபான போத்தல்களை மறைத்து வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று விமான போக்குவரத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பை மையமாக கொண்டு மதுபான வியாபாரம் செய்யும் வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் கொண்டு வரும் மது போத்தல்களை விமான நிலைய வாகன தரிப்பிடத்தில் குறைந்த விலைக்கு பெற்று இலங்கை முழுவதும் உள்ள சுற்றுலா விடுதிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகின்றார்.

கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால், அதியுயர் தரத்தை கொண்ட 99 மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...