இலங்கைசெய்திகள்

தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பம் அனுப்பியவர்களுக்கான அறிவிப்பு

Share
31 9
Share

தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பம் அனுப்பியவர்களுக்கான அறிவிப்பு

தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பம் அனுப்பி, அவை கிடைக்கப் பெறாதவர்களுக்கு விசேட கடிதம் ஒன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்த விசேட கடிதம் வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் தென் மாகாண உதவி ஆணையாளர் எம்.எல்.ஏ. சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

ஒருநாள் சேவையின் ஊடாக தென் மாகாண காரியாலயத்தில் 300 தேசிய அடையாள அட்டைகள் நாள்தோறும் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் எந்தவொரு பாகத்தில் வசிப்பவரும் இதற்காக விண்ணப்பம் அனுப்ப முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண சேவையின் ஊடாக வருடமொன்றுக்கு 40000 முதல் 45000 தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் 26696 அடையாள அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விண்ணப்பம் செய்த அனைவருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தேசிய அடையாள அட்டைகளை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு வழங்கப்பட முடியாதவர்களுக்கு தேர்தலில வாக்களிப்பதற்காக விசேட கடிதமொன்று வழங்கப்பட உள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...