15 21
இலங்கைசெய்திகள்

தேர்தல் விதி மீறல் குறித்த முறைப்பாடுகள் அதிகரிப்பு

Share

தேர்தல் விதி மீறல் குறித்த முறைப்பாடுகள் அதிகரிப்பு

தேர்தல் விதி மீறல் குறித்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 925 வரையில் அதிகரித்துள்ளதாக ஆணைக்குழு தகவல்களை வெளியிட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய தேர்தல் முகாமைத்துவ நிலையம் என்பனவற்றுக்கு இவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதன்போது, சொத்துக்கள் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் விதி மீறல்கள் தொடர்பில் இவ்வாறு முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...