28 14
இலங்கைசெய்திகள்

திடீரென காணாமல்போன 51 கோடி ரூபா பெறுமதியான நீர் மானிகள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

திடீரென காணாமல்போன 51 கோடி ரூபா பெறுமதியான நீர் மானிகள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான 51 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நீர் மானிகள் காணாமல்போனமை தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (22) நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இது தொடர்பில் அறிக்கை செய்ததோடு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சிசிர குமார ஜயவீரவின் முறைப்பாட்டின் பிரகாரம் இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான (513,644,500) பெறுமதியான நீர் மானிகள் காணாமல்போயுள்ளமை தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...