28 14
இலங்கைசெய்திகள்

திடீரென காணாமல்போன 51 கோடி ரூபா பெறுமதியான நீர் மானிகள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

திடீரென காணாமல்போன 51 கோடி ரூபா பெறுமதியான நீர் மானிகள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான 51 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நீர் மானிகள் காணாமல்போனமை தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (22) நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இது தொடர்பில் அறிக்கை செய்ததோடு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சிசிர குமார ஜயவீரவின் முறைப்பாட்டின் பிரகாரம் இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான (513,644,500) பெறுமதியான நீர் மானிகள் காணாமல்போயுள்ளமை தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...