22 12
இலங்கைசெய்திகள்

பெற்றோரை ஏமாற்றிய மாணவிகளுக்கு நேர்ந்த துயரம்

Share

பெற்றோரை ஏமாற்றிய மாணவிகளுக்கு நேர்ந்த துயரம்

மிஹிந்தலை பேருந்து நிலையத்தில் நின்ற 2 சிறுமிகள் வேனில் ஏற்றி சென்று தகாத முறைக்கு உட்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிஹிந்தலை விகாரைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக காத்திருந்த 8ஆம் வகுப்பு மாணவிகளே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சீப்புக்குளம் குக்குலேவ பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரும், சிவலகுளம் சமாதிகம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை செல்வதாக வீட்டில் கூறிவிட்டு பையில் மறைத்து கொண்டு வந்த ஆடையை பொது கழிப்பறையில் மாற்றிய சிறுமிகள், அங்கிருந்து விகாரைக்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் மீண்டும் வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்திற்கு வந்த போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது குறித்த இடத்திற்கு வேனில் வந்த பாடசாலை மாணவி ஒருவரின் காதலன் எனக் கூறிய நபர் 2 சிறுமிகளையும் வேனில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

குடும்பத்தினர் சிறுமிகளின் வயதை கருத்திற் கொண்டு வீட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்கவில்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் காதலன் இரண்டு சிறுமிகளையும் மிஹிந்தலையில் உள்ள ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்று இரண்டு நாட்கள் ஒரே அறையில் தங்க வைத்துள்ளதுடன், இரண்டாவது நாள் சந்தேக நபரின் நண்பர் ஒருவர் அறைக்கு வந்து மற்றைய மாணவியுடன் தங்கியுள்ளார்.

மறுநாள், சந்தேக நபர்கள் இரண்டு சிறுமிகளையும் ரொட்டவெவ பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சசிறுமிகள் மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சிறுமிகள் வழங்கிய வாக்குமூலங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...