3 36 scaled
இலங்கை

ஜனாதிபதி வேட்பாளர்கள் வெளியிடும் அறிக்கைகள்: கவனம் செலுத்தியுள்ள ஐஎம்எப்

Share

ஜனாதிபதி வேட்பாளர்கள் வெளியிடும் அறிக்கைகள்: கவனம் செலுத்தியுள்ள ஐஎம்எப்

இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் மேடைகளில் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் (IMF) கவனம் செலுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தலைமையில், இலங்கையை கண்காணிக்கும் கண்காணிப்புக் குழுவொன்று இந்த நாட்களில் இலங்கை வந்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட கண்காணிப்புக் குழு இந்த அறிக்கைகளை ஆராய்ந்து வருகிறது.

இலங்கையுடனான உடன்படிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் மனிதாபிமானப் பணியை வழங்கும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் கருத்துப்படி, சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடனான ஒப்பந்தத்தை மாற்றினால், அதன் நான்காவது தவணையை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க இன்னும் ஒரு வருடம் ஆகும்.

இந்த வருடம் நவம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த நான்காவது தவணை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை தாமதிக்கப்படும் எனவும் நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கடந்த 19 ஆம் திகதி இரவு கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த இந்தக் கண்காணிப்புக் குழு, இந்த வாரத்திற்குள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
1769561293 Sri Lanka former President Ranil Wickremesinghe Colombo Court 6
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான பொதுச் சொத்து முறைகேடு வழக்கு: இன்று மீண்டும் நீதிமன்றில் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று...

26 6978f30ec21fc
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எங்கள் மௌனத்தின் குரலாக இருந்தவர்: மறைந்த மனித உரிமைப் போராளி ரி.குமாருக்கு வவுனியாவில் அஞ்சலி!

மனித உரிமை ஆர்வலர் ரி.குமார் என்று அழைக்கப்படும் த. முத்துக்குமாரசாமிக்கான உருக்கமான அஞ்சலி நிகழ்வு, வவுனியாவில்...

UTV 59 960x540 1 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு: விருந்துபசாரத்தின் போது தாக்குதல் – காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

காலி, அம்பலாங்கொடை பகுதியில் உள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த...

26 6978aed5d377a
செய்திகள்அரசியல்இலங்கை

2015-ல் ஜே.வி.பி-க்கும் குடிமக்கள் சக்திக்கும் ஐ.தே.க பணம் கொடுத்தது: ராஜித சேனாரத்ன அதிரடித் தகவல்!

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது, மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும்...