19 15
இலங்கைசெய்திகள்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் கைது செய்யப்படுவார்! அனுர உறுதி

Share

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் கைது செய்யப்படுவார்! அனுர உறுதி

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் சிவப்பு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள அர்ஜூன் மகேந்திரனை கைது செய்து இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளுமாறு அப்போது மத்திய வங்கிக்கு பொறுப்பான அமைச்சர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

அர்ஜூன் மகேந்திரன் கோப் குழு விசாரணைகளின் போது இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலமொன்றை அளித்திருந்தார் எனவும் இதனால் அவர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் மகேந்திரன் மற்றும் ரணில் விக்ரமசிங்கவிடம் நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்படும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....