6 28
இலங்கைசெய்திகள்

தனமல்விலவில் சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய சம்பவம் : சட்ட வைத்திய அதிகாரியும் கைது

Share

தனமல்விலவில் சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய சம்பவம் : சட்ட வைத்திய அதிகாரியும் கைது

மொனராகலை – தனமல்வில பகுதியில் 16 வயது பாடசாலை மாணவியை தவறான நடவடிக்கைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சட்ட வைத்திய அதிகாரி, தனது மகளை பரிசோதித்த போது திட்டியதாகவும், மிரட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும் கடந்த வாரம் தனமல்வில சிறுமியின் தாயார் முறையிட்டமையை அடுத்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவி 22 மாணவர்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதாக பொலிஸ் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்தநிலையில் சட்ட வைத்திய அதிகாரியின் கடுமையான செயற்பாட்டிற்கு பிறகு தனது மகள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுமியின் தாய் கூறியுள்ளார்.

மேலும், குறித்த சிறுமி பொய் சொல்வதாக தெரிவித்தே அவரை சட்ட வைத்திய அதிகாரி திட்டியதாக தாயார் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, கைது செய்யப்பட்ட சட்ட வைத்திய அதிகாரி, சனிக்கிழமை 300,000 ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, சம்பவத்தில் தொடர்புடைய 20இற்கும் மேற்பட்ட மாணவர்கள் விசாரணையின் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அத்துடன், சம்பவத்தை மூடிமறைத்த குற்றச்சாட்டில் சிறுமி படித்த பாடசாலையின் அதிபர் உட்பட நான்கு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...