14 11
இலங்கை

களுத்துறை வைத்தியசாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட குழப்பம்: அவசரமாக வெளியேற்றப்பட்ட நோயாளிகள்

Share

களுத்துறை வைத்தியசாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட குழப்பம்: அவசரமாக வெளியேற்றப்பட்ட நோயாளிகள்

களுத்துறை தாய் மற்றும் சிறுவர் வைத்தியசாலையில் திடீரென தீ எச்சரிக்கை கருவி இயங்கியமையினால் வைத்தியசாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு (13) இடம்பெற்ற இந்த சம்பவம் காரணமாக வைத்தியசாலை ஊழியர்களும், நோயாளர்களும் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ எச்சரிக்கை மணி ஒலித்ததையடுத்து, களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினரை உடனடியாக வரவழைத்து பாதுகாப்புப்படையினரும், வைத்தியசாலை ஊழியர்களும் இணைந்து வைத்தியசாலை கட்டடத்தில் இருந்து நோயாளிகளை வெளியேற்றியுள்ளனர்.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வைத்தியசாலையின் மின் அமைப்பு மற்றும் வைத்தியசாலையை சுமார் ஒரு மணி நேரம் கண்காணித்து, பாதுகாப்பை உறுதிசெய்த பின்னர் நோயாளிகள் மற்றும் மவைத்தியசாலை ஊழியர்களை மீண்டும் உள்ளே அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து முன்னெடுக்கபட்ட விசாரணையில் இரண்டாவது மாடியில் பொருத்தப்பட்டிருந்த தீ எச்சரிக்கை அமைப்பை ஒருவர் இயக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கமைய, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...

25 688ddffa557e6
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை: விதிமுறையை மீறினால் சட்ட நடவடிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் பின்புற பயணிகள் ஆசனப்பட்டி அணிவது நேற்று (01) முதல்...