12 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இருந்து வெளியேற வேண்டாம் என்று கோட்டாபயவை வலியுறுத்திய இந்தியா

Share

இலங்கையில் இருந்து வெளியேற வேண்டாம் என்று கோட்டாபயவை வலியுறுத்திய இந்தியா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) இலங்கையை விட்டு வெளியேற வேண்டாம் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர், அந்த நேரத்தில் வற்புறுத்த முயன்றார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியிருந்தால், அதனை புதுடில்லியில் உள்ளவர்கள் வழங்கத் தயாராக இருப்பதாக கோட்டாபயவுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதாலும், வன்முறையின் மூலம் அவர் வெளியேற்றப்படுவது புதுடில்லிக்கு சிறந்த விடயமாக இருக்காது என்ற அடிப்படையில் இந்தியா இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் முதலில் இந்தியாவுக்குச் சென்றார் என்பதும் இதன்போது கருத்திற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கோட்டாபய அதனை ஏற்காது நாட்டில் இருந்து வெளியேறினார்

பங்களாதேஸின் முன்னாள் பிரதமர் சேக் ஹசீனா, இந்தியாவில் அடைக்கலம் பெற்றுள்ளமையை அடுத்தே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
Rain 1200px 22 10 17
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் அதிக மழைவீழ்ச்சி: கடற்பரப்புகளில் பலத்த காற்று வீச எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையின் மத்தியில், யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக...

images 5 1
செய்திகள்இலங்கைசினிமாபொழுதுபோக்கு

விஜய்-சூர்யா-வடிவேலுவின் ‘Friends’ திரைப்படம் 4K தரத்தில் மீண்டும் வெளியீடு!

நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘ப்ரண்ட்ஸ்’ (Friends) திரைப்படம் மீண்டும்...

images 4 1
செய்திகள்இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள்: QR குறியீட்டு வவுச்சர்கள் வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பாதணிகளைப்...

1720617259 Piyumi 2
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான தொடர்பு: நடிகை பியூமி ஹன்சமாலியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை!

தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான உறவு குறித்து நடிகை...