இலங்கைசெய்திகள்

சஜித் தலைமையிலான அரசாங்கத்தில் யாருக்கு பிரதமர் பதவி: கட்சிக்குள் பேச்சுவார்த்தை

Share
4 10
Share

சஜித் தலைமையிலான அரசாங்கத்தில் யாருக்கு பிரதமர் பதவி: கட்சிக்குள் பேச்சுவார்த்தை

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைத்தால் பிரதமர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் தரப்பு வெற்றியீட்டினால், பிரதமர் பதவி ரஞ்சித் மத்துமபண்டாரவிற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

ரஞ்சித் மத்துமபண்டார கட்சியின் பொதுச்செயலாளராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பதவி குறித்து தற்பொழுது கட்சியில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரஞ்சித் மத்தும பண்டாரவின் தேர்தல் தொகுதியான மொனராகல் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி ஆதரவாளர்களும் இந்த விடயம் பற்றி தெரிவித்துள்ளனர்.

ஏனைய கட்சிகள் தங்களது அரசாங்கத்தின் பிரதமர் யார் என்பது பற்றிய பேச்சுக்களை இதுவரையில் முன்னெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...