13 5
இலங்கைசெய்திகள்

பல மில்லியன் நிவாரணம்! அடுத்த ஜனாதிபதியால் எதையும் மாற்ற முடியாது: பந்துல திட்டவட்டம்

Share

பல மில்லியன் நிவாரணம்! அடுத்த ஜனாதிபதியால் எதையும் மாற்ற முடியாது: பந்துல திட்டவட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு எமக்கு 3855 மில்லியன் நிவாரணம் கிடைக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், இன்னும் சில மாதங்களில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் இருந்தாலும் சரி, யார் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் சரி, கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் ஏற்பட்டால், 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை உருவாக்க முடியாது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்குவதாக உறுதியளித்துள்ளதுடன் எமக்கு 3855 மில்லியன் நிவாரணம் கிடைக்கும்.

வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற, தற்போதுள்ள நிதி அமைச்சர் மற்றும் நிதி அமைச்சும் சர்வதேச நாணய நிதியத்தில் கையொப்பமிட்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய, 2025ஆம் ஆண்டளவில் 5018 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு வள இடைவெளி இருக்கும் என்று மதிபீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதில் 663 மில்லியன் நிதியை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது.

எனவே சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள கடன் ஒப்பந்தம் தேர்தல் அல்லது ஏனைய விடயங்களை பொருட்படுத்தாது 2027 ஆம் ஆண்டு வரை அதே வழியில் செயற்படும்.”என கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...