8 7
இலங்கைசெய்திகள்

சொத்து பிரகடனங்களை வழங்கிய அரசியல்வாதிகள்

Share

சொத்து பிரகடனங்களை வழங்கிய அரசியல்வாதிகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe), பிரதமர் தினேஷ் குணவர்தன(dinesh gunawardena), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(sajith premadasa), மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க(anura kuma dissanayaka)உள்ளிட்ட அரசியல்வாதிகள் குழுவொன்று சொத்துப் பிரகடனங்களை வழங்கியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புதிய சொத்துப் பிரகடனச் சட்டத்தின் பிரகாரம், ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்துப் பொதுப் பிரதிநிதிகளும் சொத்துப் பிரகடனங்களைச் சமர்ப்பித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்ததோடு, இதன்படி ஒவ்வொரு வருடமும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அதிகாரிகளும் தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிக்க வேண்டும்.

முன்னர், அரசியல்வாதிகளின் சொத்துப் பொறுப்பு அறிக்கைகள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றம், மாகாண சபை அல்லது உள்ளூராட்சி சபையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் புதிய சட்டத்தின்படி, அந்த சொத்துப் பொறுப்பு அறிக்கைகள் அனைத்தும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும்.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...