7 6
இலங்கைசெய்திகள்

ரணில் பசில் இடையில் முறுகல் நிலை : நாமல் விளக்கம்

Share

ரணில் பசில் இடையில் முறுகல் நிலை : நாமல் விளக்கம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் (Ranil Wickramasinghe) பசில் ராஜபக்சவிற்கும் (Basil Rajapaksa) இடையில் விரிசல் வரக் காரணம் எஸ்.எம்.சந்திரசேனவிற்காக (S.M Chandrasena) நிபந்தனையற்ற விதத்தில் ஆதரவு வழங்கியமையே என நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அநுராதபுரத்தில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பசில் ராஜபக்ச எஸ்.எம்.சந்திரசேன விரும்பிய பதவிகளை வழங்குவதற்காகவே போராடினார் அன்று பசில் ராஜபக்ச நிபந்தனையின்றி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்காக உதவினார்.

பசில் ராஜபக்சவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் ஏதேனும் விரோதம் இருந்திருந்தால், அதற்குக் காரணம் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு தேவையான பதவிகளை வழங்குவதற்காக நாங்கள் போராடியதே.

நம் உள்ளமும் மனமும் தூய்மையானது எங்களால் முடிந்ததைச் செய்தோம் ஆனால் இன்று அவர்கள் எடுக்கும் முடிவு அவர்களின் முடிவு திரும்பி வருபவர்களுக்கு கட்சியின் கதவு திறந்தே உள்ளது அவர்கள் மகிந்த ராஜபக்சவின் வாசல் வழியாக கட்சிக்கு வந்து செல்லலாம்.

நாமல் ராஜபக்ச ஹம்பாந்தோட்டைக்கு போனாலும் ஹம்பாந்தோட்டை வெற்றி பெற இரண்டாவது வரிசை உள்ளது அனுராதபுரமும் அப்படித்தான் முதல் வரிசைக்குப் போனால் இரண்டாம் வரிசைக்குப் பொறுப்பேற்று,கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர் கட்சி இயந்திரம் மிகவும் வலுவாக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Police 2
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் விவகாரம்: 500 பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை – பொலிஸ்மா அதிபர் அதிரடி அறிவிப்பு!

இலங்கை பொலிஸ் துறையில் ஊழல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்காக எடுத்துவரும் தொடர்ச்சியான முயற்சிகளின்...

MediaFile 8
செய்திகள்உலகம்

மதுரோவை விட மோசமான நிலையைச் சந்திப்பீர்கள்: இடைக்கால ஜனாதிபதி டெல்சிக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல்!

வெனிசுலாவின் தற்போதைய இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாவிட்டால் மிகக்கடுமையான விளைவுகளைச் சந்திக்க...

images 2 3
செய்திகள்உலகம்

கைவிலங்குடன் நீதிமன்றத்தில் மதுரோ: அமெரிக்காவைப் பழிதீர்ப்போம் என மகன் ஆக்ரோஷ எச்சரிக்கை!

அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி...

25 693a84d09bd08 md
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பதுளை மாவட்டத்தில் கனமழை: நிலச்சரிவு அபாயம் குறித்து மாவட்டச் செயலாளர் அவசர எச்சரிக்கை!

ஊவா மாகாணத்தில் எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள...