இலங்கைசெய்திகள்

மகிந்தவின் சலூன் வாசல் திறந்துள்ளது – நாமல் அழைப்பு

4 7
Share

மகிந்தவின் சலூன் வாசல் திறந்துள்ளது – நாமல் அழைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மீண்டும் வருபவர்களுக்கு கட்சியின் கதவு திறந்தே உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் சலூன் கதவு வழியாக கட்சிக்கு வரவும் முடியும் அங்கிருந்து செல்லவும் முடியும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷ, எஸ்.எம்.சந்திரசேனவுக்காக நிபந்தனையின்றி குரல் கொடுத்ததாகவும், தான் விரும்பிய பதவிகளை வழங்குவதற்காக அவர் போராடியதன் விளைவாக ரணில் விக்ரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்சவுக்கும் முரண்பாடு ஏற்பட்டதாகவும் நாமல் தெரிவித்தார்.

அன்று, எஸ்.எம். சந்திரசேனவுக்கான அமைச்சு பதவியை பெற, பசில் ராஜபக்ஷ நிபந்தனையின்றி ஆதரவு தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷவிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் ஏதாவது மனக்கசப்பு இருந்தால் அதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

சந்திரசேனவிற்கு பதவிகளை வழங்குவதற்காக நாங்கள் போராடியதும் ரணிலுடன் ஏற்பட்ட முரண்பாட்டிற்கு காரணமாக மாறியதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....