9 2
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்றில் கைது செய்யப்பட்ட 24 இலங்கையர்கள் விடுதலை

Share

வெளிநாடொன்றில் கைது செய்யப்பட்ட 24 இலங்கையர்கள் விடுதலை

குவைட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கலைஞர்கள் உள்ளிட்ட 26 பேரில் 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சு இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.

குவைட் அதிகாரிகள் 24 இலங்கையர்களை கைது செய்துள்ளதாக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் தனது X கணக்கில் பதிவொன்றினை இட்டு இதனை தெரிவித்துள்ளார்.

குவைட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “Sri Lankan Summer Nights” இசை நிகழ்ச்சியில் இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்களும் உள்ளடங்குவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து குவைட்தூதரகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...