24 66addd542c3dc
இலங்கைசெய்திகள்

தென் பகுதியில் முதன் முறையாக மீட்கப்பட்ட அரிய வகை புலம்பெயர் பறவை

Share

ஹிக்கடுவ கடற்கரையில் சுகயீனம் அடைந்த நிலையில் காணப்பட்ட அரிய வகை புலம்பெயர்ந்த பறவையொன்று வனவிலங்கு அதிகாரிகள் குழுவினால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அத்திடிய பறவைகள் சரணாலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதன்போது, மீட்கப்பட்ட பறவை Shearwater என அழைக்கப்படும் கிழக்கு ஆபிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு மேற்கே உள்ள வெப்பமண்டலப் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டது என ஹிக்கடுவ வனவிலங்கு பூங்காவின் காப்பாளர் அசங்க குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த வெப்பமண்டலப் பறவையானது மனித வாழ்விடங்களிலிருந்து விலகி, பாறைப் பிளவுகள் அல்லது மணல் மேடு குழிகளில் முட்டையிடும் எனவும் குஞ்சு பொரித்த பிறகு, குஞ்சுகள் பறக்கும் வரை நீண்ட காலத்திற்கு பாதுகாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், Shearwater பறவையானது நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்வை என்பதுடன் கடலில் மிதக்கும் பொலித்தீன் அல்லது பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொள்வதால் நோய்வாய்ப்படும் என்றும் குணவர்தன கூறியுள்ளார்.

இந்நிலையில், ஹிக்கடுவ கடற்கரையில் மீட்கப்பட்ட Shearwater, அத்தகைய குப்பைகளை உட்கொண்டுள்ளதன் காரணமாகவே சுகயீனம் அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தெற்கு பிராந்தியத்தில் Shearwater இனப்பறவையை காண்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...