24 66addd542c3dc
இலங்கைசெய்திகள்

தென் பகுதியில் முதன் முறையாக மீட்கப்பட்ட அரிய வகை புலம்பெயர் பறவை

Share

ஹிக்கடுவ கடற்கரையில் சுகயீனம் அடைந்த நிலையில் காணப்பட்ட அரிய வகை புலம்பெயர்ந்த பறவையொன்று வனவிலங்கு அதிகாரிகள் குழுவினால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அத்திடிய பறவைகள் சரணாலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதன்போது, மீட்கப்பட்ட பறவை Shearwater என அழைக்கப்படும் கிழக்கு ஆபிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு மேற்கே உள்ள வெப்பமண்டலப் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டது என ஹிக்கடுவ வனவிலங்கு பூங்காவின் காப்பாளர் அசங்க குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த வெப்பமண்டலப் பறவையானது மனித வாழ்விடங்களிலிருந்து விலகி, பாறைப் பிளவுகள் அல்லது மணல் மேடு குழிகளில் முட்டையிடும் எனவும் குஞ்சு பொரித்த பிறகு, குஞ்சுகள் பறக்கும் வரை நீண்ட காலத்திற்கு பாதுகாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், Shearwater பறவையானது நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்வை என்பதுடன் கடலில் மிதக்கும் பொலித்தீன் அல்லது பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொள்வதால் நோய்வாய்ப்படும் என்றும் குணவர்தன கூறியுள்ளார்.

இந்நிலையில், ஹிக்கடுவ கடற்கரையில் மீட்கப்பட்ட Shearwater, அத்தகைய குப்பைகளை உட்கொண்டுள்ளதன் காரணமாகவே சுகயீனம் அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தெற்கு பிராந்தியத்தில் Shearwater இனப்பறவையை காண்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...