15
இலங்கைசெய்திகள்

ரணிலுக்கான ஆதரவுக்கூட்டம் : தலதா அத்துகோரள சென்றமை குறித்து சர்ச்சை

Share

ரணிலுக்கான ஆதரவுக்கூட்டம் : தலதா அத்துகோரள சென்றமை குறித்து சர்ச்சை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரிக்கும் நிலைப்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நிராகரித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு, பத்தரமுலவில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் விருந்தகத்தில் நேற்று(31) இடம்பெற்றது.

இந்த தருணத்தில் விருந்தகத்தில் இருந்து தலதா அத்துக்கோரள வெளியே வந்தபோது அங்கு செய்தி சேகரிப்புக்காக காத்திருந்த செய்தியாளர்கள், தலதாவிடம் கேள்விகளை எழுப்பினர்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பீர்களா என்ற வினாவை அவர்கள் தொடுத்தனர். எனினும் தாம் வேறொரு நிகழ்ச்சிக்கு வந்ததாகவும், ஜனாதிபதி விக்ரமசிங்கவை ஆதரிக்கும் கூட்டத்துடன் தாம் இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் ஜனாதிபதியுடன் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கடந்த காலங்களில் அவருடன் பேசி இருக்கிறேன். இன்றும் அதைச் செய்கிறேன். நாளையும் அப்படித்தான் இருக்கும் என்று ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...