16
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளை எரிப்பது நியாயமானது: நாமல் தெரிவிப்பு

Share

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளை எரிப்பது நியாயமானது: நாமல் தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்கி அவர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கட்சி என்ற ரீதியில் தாம் வலுவாக இருப்பதாகவும், இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்த போதும் சிலர் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்சக்கள் காரணமாக தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதிக்கு உதவுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தற்பொழுது ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேசி தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியூதீன் போன்றோருக்கு பேசி உதவி பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

மொட்டு கட்சியின் சிங்கள பௌத்த வாக்கு அடிப்படையினால் தமிழ் முஸ்லிம் தரப்புக்கள் ஜனாதிபதியுடன் இணையவில்லை என குற்றம் சுமத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

தற்பொழுது அனைத்து தரப்பினருக்கும் பேசி அவர்களது ஆதரவினை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எண்ணிக்கை விளையாட்டில் ஈடுபட எம்மாலும் முடியும் எனவும் எனினும் அவ்வாறு செய்து அவர்களின் நிலைமைக்கு கீழே இறங்க நாம் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலின் போது மக்கள் யாருடன் இருக்கின்றார்கள் என்பது தெரியவரும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டை சில அரசியல்வாதிகள் உறுதிப்படுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் அரசியல்வாதிகளை தாக்கி வீடுகளை எரிப்பது நியாயமானது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...

MediaFile 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி முகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு, காலி முகத்திடல் (Galle Face) வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...