15 15
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான நிதியுதவிகளை மீள ஆரம்பிக்கும் தென் கொரியா

Share

இலங்கைக்கான நிதியுதவிகளை மீள ஆரம்பிக்கும் தென் கொரியா

தென் கொரியாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கியான (கொரியா எக்ஸிம்பேங்க்), இலங்கையின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி சலுகைக் கடன் திட்டங்களை மீண்டும் ஆரம்ப்பிப்பதற்கான அதன் முடிவை இலங்கையின் நிதி அமைச்சகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தென்கொரிய உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவும், இலங்கையும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்த பின்னர் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், ருவன்வெல்ல நீர் வழங்கல் திட்டம் உட்பட ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்மாணத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை மீள ஆரம்பிக்க இந்த தீர்மானம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரிய குடியரசிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதில் இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

இது நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் ஸ்திரப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முக்கிய முடிவின் மூலம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டம், பயன்பாட்டுத் திட்டங்கள், சுகாதாரத் துறை மேம்பாட்டுத் திட்டங்கள், கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படவுள்ளன.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...