இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான நிதியுதவிகளை மீள ஆரம்பிக்கும் தென் கொரியா

Share
15 15
Share

இலங்கைக்கான நிதியுதவிகளை மீள ஆரம்பிக்கும் தென் கொரியா

தென் கொரியாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கியான (கொரியா எக்ஸிம்பேங்க்), இலங்கையின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி சலுகைக் கடன் திட்டங்களை மீண்டும் ஆரம்ப்பிப்பதற்கான அதன் முடிவை இலங்கையின் நிதி அமைச்சகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தென்கொரிய உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவும், இலங்கையும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்த பின்னர் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், ருவன்வெல்ல நீர் வழங்கல் திட்டம் உட்பட ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்மாணத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை மீள ஆரம்பிக்க இந்த தீர்மானம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரிய குடியரசிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதில் இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

இது நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் ஸ்திரப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முக்கிய முடிவின் மூலம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டம், பயன்பாட்டுத் திட்டங்கள், சுகாதாரத் துறை மேம்பாட்டுத் திட்டங்கள், கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படவுள்ளன.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...