18 14
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகும் தீர்மானதில் ரணில்! அரசியல்வாதி கசியவிட்ட தகவல்

Share

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகும் தீர்மானதில் ரணில்! அரசியல்வாதி கசியவிட்ட தகவல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தாம் தோற்கடிக்கப்படுவோம் என தெரிந்தே போட்டியில் இறங்குபவர் அல்ல என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தற்போதைய தேசிய அமைப்பாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இணைய செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய உரையாடலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தற்சமயம் உறுதியான தோல்வியை எதிர்நோக்கியுள்ளார்.

அனைவருக்கும் முன்பாகவே, கட்டு பணத்தை வைப்பு செய்துள்ள போதிலும் ஜனாதிபதி தேர்தலில், அவர் போட்டியிடுவது சந்தேகமே என அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் கடைசி நாள் வரை இது தொடர்பில் நிச்சயமற்ற நிலை நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் ரணில் விக்ரமசிங்க, தாம் தோற்றுப்போவதாக நினைத்து ஜனாதிபதி தேர்தலுக்கு வேறு சிலரையே முன்மொழிந்து வந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்திய போதிலும், கடைசி நேரத்தில் கூட அவர் போட்டியிடப் போவதில்லை என்ற எண்ணம்,தனக்கு தனிப்பட்ட முறையில் இருப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...