12 14
இலங்கைசெய்திகள்

பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு

Share

பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு

பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் தற்போதும் ரணில் விக்ரமசிங்கவுக்கே காணப்படுகின்றது என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “பொலிஸ் மா அதிபரை தான் நியமிக்க முடியாது என்று சொல்வதை ஏற்க முடியாது ரனில் விக்ரமசிங்க ஐந்து முறை பிரதமராகவும் தற்போது ஜனாதிபதியாகவும் 47 வருட அரசியல் வாழ்க்கையில் நாட்டிற்கு எதையும் செய்யவில்லை.

நாட்டிலே ஜூலை மாதத்திலே 41 வருடத்திற்கு முன்னர் நடந்த ஜூலை கலவரத்திற்கு இவர்களின் ஐக்கிய தேசியக் கட்சியே காரணமாக இருந்து தமிழ் மக்களின் சொத்துக்களையும் உயிர்களையும் பறித்தது.

இவ்வாறாக தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாட்டை செய்த தேசியக் கட்சி கடந்த தேர்தலில் ஒரு ஆசனத்தை பெறக் கூட முடியாத ஐக்கிய தேசியக் கட்சி, கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய காலப்பகுதிக்கு ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது தனது பதவியை தக்க வைப்பதன் நோக்கம் ஊழல் நிறைந்த ராஜபக்ச ஆட்சியினரை காப்பாற்றுவதற்காகவே இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

உலகமே வியந்து பார்க்கின்ற மோசடி விவகாரத்தில் ரணில் விக்ரமசிங்க தனது நண்பர்களை பாதுகாப்பதற்காக இவ்விடயத்தை மூடி மறைத்து நாட்டுக்கு துரோகச் செயலை செய்தார்.

இவ்வாறாக நாட்டுக்கு பல துரோகம் இழைத்த ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக வந்தால் நாடு மீண்டும் சிக்கலான நிலைமைக்கு மாறும்.

எனவே இவ்வாறான ஊழல்களை ஒழித்துக்கட்டும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவை மக்கள் தெரிவு செய்து அவரை நாட்டின் ஜனாதிபதியாக முயற்சி செய்ய வேண்டும்“ என்றும் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...