3 38
இலங்கைசெய்திகள்

அரசியல் மேடையில் மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக சாடிய ரணில்

Share

அரசியல் மேடையில் மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக சாடிய ரணில்

நாட்டைப் பாதுகாக்கத் தவறியதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற விசேட அரசியல் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

அரசியலமைப்பின் 4 வது பிரிவின் கீழ், நாட்டின் பாதுகாப்பிற்கு ஜனாதிபதி பொறுப்பு கூறவேண்டும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ”நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பொலிஸாரின் தேவை.

இதனை கருத்தில் கொண்டு புலனாய்வுப் பிரிவு மற்றும் சிறப்பு அதிரடிப் படை செயல்பட வேண்டும். இந்த திறன்களை நாம் இழந்தால் என்ன நடக்கும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

போதைப்பொருளை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய பிரசாரம் இந்த வாரம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனை சரியான நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...