24 669b91522188c
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதம்

Share

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதம்

சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணையம் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.

இதன்படி முப்பது இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.

சொத்துப் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

சொத்துப் பொறுப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30ஆம் திகதிக்கு முன் சபாநாயகரிடம் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழு சட்டத்தின்படி சொத்துப் பிரகடனங்களை சமர்ப்பிக்கத் தவறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...