3 15 scaled
இலங்கைசெய்திகள்

பொதுமக்கள் – வைத்தியர்கள் முரண்பாடு! அர்ச்சுனாவின் எச்சரிக்கை

Share

பொதுமக்கள் – வைத்தியர்கள் முரண்பாடு! அர்ச்சுனாவின் எச்சரிக்கை

வைத்தியர்கள் மீண்டுமொருமுறை பணிப்புறக்கணிப்பு செய்தால் பொதுமக்களுக்கும் வைத்தியர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படக்கூடும் என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (15.07.2024) வருகை தந்த வைத்தியர் அர்ச்சுனாவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நேற்றுடன் என்னுடைய விடுமுறை முடிவடைந்ததால் நான் இன்று பணிக்குத் திரும்பியுள்ளேன். நான் வைத்தியர் ரஜீவை தொந்தரவு செய்வதற்கோ வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களைத் தொந்தரவு செய்வதற்காகவோ இங்கு வரவில்லை.

வைத்தியர் ரஜீவ் என்னுடைய வேலையைச் செய்தால் எனக்குச் சந்தோசம். கொழும்பில் முக்கிய அதிகாரிகளோடு கலந்துரையாடலில் ஈடுபட்டேன். நாளை சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளனர்.

வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் அந்தக் குழுவிடம் பொதுமக்கள் தங்கள் முறைப்பாடுகளை முன்வைக்கலாம். நாளை சுகாதார அமைச்சரால் எனக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஏதும் தரப்பட்டால் அதனை முழுமையாக ஏற்கத் தயாராகவுள்ளேன்.

வைத்தியர்கள் மீண்டுமொரு முறை பணிப்புறக்கணிப்புச் செய்தால் பொதுமக்களுக்கும் வைத்தியர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படக்கூடும். அதனை வைத்தியர்கள் உணர வேண்டும். நாங்கள் பொதுமக்களின் மனதை வெல்ல வேண்டும்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களால் பாலியல் தொந்தரவுகள் இடம்பெறுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் அதனை முறைப்பாடு செய்ய முன்வராததால் கள்வர்கள் தப்பித்துக் கொள்கின்றார்கள். அதனைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது” என்றார்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...