24 669350d7bef43
இலங்கைசெய்திகள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 40 கொள்கலன்கள் இயற்கை எரிவாயு

Share

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 40 கொள்கலன்கள் இயற்கை எரிவாயு

இலங்கை ஏற்றுக்கொண்ட இந்திய (India) அரசாங்கத்தின் முன்மொழிவின் அடிப்படையில், புதுடில்லியைத் (New Delhi) தலைமையிடமாகக் கொண்ட பெட்ரோநெட் எல்என்ஜி லிமிடெட், இலங்கையின் கெரவலப்பிட்டியவில் உள்ள வெப்ப ஆலைகளுக்கு ஒரு நாளைக்கு 40 கொள்கலன்கள் என்ற விகிதத்தில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வழங்கவுள்ளது.

இவை இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து அனுப்பப்பட்டு, கெரவலப்பிட்டியவில் உள்ள இலங்கையின் LTL ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் நடத்தப்படும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு சாலை வழியாக கொண்டு செல்லப்படும்.

திட்டப்படி, இந்திய நிறுவனம், ஒரு நாளைக்கு 60-70 கொள்கலன் அளவில் ஏற்றுமதியை விரிவுபடுத்த சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனால், போட்டி கேள்வி, பத்திரக்கோரல் இல்லாததால் ஒப்பந்தத்தின் தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

இது அரசாங்கத்திற்கு-அரசாங்கத்திற்கு (G-to-G) ஒப்பந்தம் என்று விபரிக்கப்படுகிறது

எனினும் இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான PLL இலிருந்து எரிவாயுவை நேரடியாக வாங்குவதற்கு, சுருங்கிய உரிமைக் கட்டமைப்பைக் கொண்டLTL ஹோல்டிங்ஸ் லிமிடெட்.டிகு உரிமம் வழங்க இலங்கை முன்மொழிந்துள்ளது.

முன்னதாக, சீன ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி (CHEC) மற்றும் பாகிஸ்தானின் என்க்ரோ கோர்ப்பரேஷன் ஆகியவை கெரவலப்பிட்டியில் மிதக்கும் சேமிப்பு மற்றும் மறு எரிவாயு அலகு, கடல் மற்றும் கடலோர மறு எரிவாயு எல்என்ஜி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகளை வழங்கியிருந்த போதும், இலங்கை கடந்த ஆண்டு, அவற்றை இடைநிறுத்தியது.

Share
தொடர்புடையது
15
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரம்: ஏப்ரலுக்குப் பிறகாவது நீதி உறுதி – அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ வாக்குறுதி!

2019 ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்போதைய...

14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மரண தண்டனை அமுலாகுமா? – அமைச்சரவை இன்னும் தீர்மானிக்கவில்லை என நலிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்!

இலங்கையில் தூக்குத் தண்டனை உள்ளிட்ட மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் இதுவரை எவ்வித...

13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கச்சதீவு திருவிழா பிப்ரவரி 27-இல் கொடியேற்றம்! – 8,000 பக்தர்கள் பங்கேற்க விரிவான ஏற்பாடு.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்த...

12
செய்திகள்அரசியல்இலங்கை

ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் நிகழ்வுகள் ரத்து: ஜனநாயகம் அடக்கப்பட்டுவிட்டது – அலி சப்ரி கடும் விசனம்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிரித்தானியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் (Oxford Union)...