24 669350d7bef43
இலங்கைசெய்திகள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 40 கொள்கலன்கள் இயற்கை எரிவாயு

Share

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 40 கொள்கலன்கள் இயற்கை எரிவாயு

இலங்கை ஏற்றுக்கொண்ட இந்திய (India) அரசாங்கத்தின் முன்மொழிவின் அடிப்படையில், புதுடில்லியைத் (New Delhi) தலைமையிடமாகக் கொண்ட பெட்ரோநெட் எல்என்ஜி லிமிடெட், இலங்கையின் கெரவலப்பிட்டியவில் உள்ள வெப்ப ஆலைகளுக்கு ஒரு நாளைக்கு 40 கொள்கலன்கள் என்ற விகிதத்தில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வழங்கவுள்ளது.

இவை இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து அனுப்பப்பட்டு, கெரவலப்பிட்டியவில் உள்ள இலங்கையின் LTL ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் நடத்தப்படும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு சாலை வழியாக கொண்டு செல்லப்படும்.

திட்டப்படி, இந்திய நிறுவனம், ஒரு நாளைக்கு 60-70 கொள்கலன் அளவில் ஏற்றுமதியை விரிவுபடுத்த சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனால், போட்டி கேள்வி, பத்திரக்கோரல் இல்லாததால் ஒப்பந்தத்தின் தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

இது அரசாங்கத்திற்கு-அரசாங்கத்திற்கு (G-to-G) ஒப்பந்தம் என்று விபரிக்கப்படுகிறது

எனினும் இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான PLL இலிருந்து எரிவாயுவை நேரடியாக வாங்குவதற்கு, சுருங்கிய உரிமைக் கட்டமைப்பைக் கொண்டLTL ஹோல்டிங்ஸ் லிமிடெட்.டிகு உரிமம் வழங்க இலங்கை முன்மொழிந்துள்ளது.

முன்னதாக, சீன ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி (CHEC) மற்றும் பாகிஸ்தானின் என்க்ரோ கோர்ப்பரேஷன் ஆகியவை கெரவலப்பிட்டியில் மிதக்கும் சேமிப்பு மற்றும் மறு எரிவாயு அலகு, கடல் மற்றும் கடலோர மறு எரிவாயு எல்என்ஜி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகளை வழங்கியிருந்த போதும், இலங்கை கடந்த ஆண்டு, அவற்றை இடைநிறுத்தியது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...