12 1
இலங்கைசெய்திகள்

கொழும்பில் கொலை செய்யப்பட்ட வசந்த – வெளிநாட்டு நபருக்காக காத்திருக்கும் சடலம்

Share

கொழும்பில் கொலை செய்யப்பட்ட வசந்த – வெளிநாட்டு நபருக்காக காத்திருக்கும் சடலம்

அத்துருகிரியில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் சடலம் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலை இரண்டு நாட்களுக்கு வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல் தனியார் மலர்சாலையில் வைத்திருப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த கிளப் வசந்தாவின் இரண்டாவது மகன் வெளிநாட்டில் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் இந்நாட்டிற்கு வரும் வரையில் சடலத்தை மலர்சாலையில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை அதுருகிரியில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட கிளப் வசந்த என்ற தொழிலதிபர், அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவரின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 சந்தேகநபர்களும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் பச்சைகுத்தும் நிலைய உரிமையாளர் துலான் சஞ்சுலாவும் ஒருவராகும். குறித்த ஏழு பேரும் நேற்றிரவு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கிளப் வசந்த கொலைச் சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நயனா வசுலாவின் சடலத்தின் இறுதிக் கிரியைகள் நேற்று பிற்பகல் தலாஹேன பொது மயானத்தில் இடம்பெற்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
siemens healthineers insights series 43 digital platforms in healthcare
இலங்கைசெய்திகள்

இலங்கையின் இலவச சுகாதார சேவை டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது: அடுத்த 10 ஆண்டுகளுக்கான மூலோபாயத்தை வகுக்க வழிகாட்டுதல் குழு ஸ்தாபனம்!

இலங்கையின் இலவச சுகாதார சேவையை முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்காக, சுகாதார மற்றும் பொது ஊடக...

ananda wijepala
செய்திகள்இலங்கை

நுவரெலியா மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் எவருமில்லை: அநுராதபுரத்தில் 7,100 பேர் – அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தகவல்!

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே எந்தவொரு சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரியும் சேவையில் இல்லை என்று...

1706773265 AL exam paper marking l
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் விரைவில் ஆரம்பம்: பரீட்சை முடிவதற்கு முன்னரே திட்டமிடல் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை...

image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...